நமது நாட்டின் 80 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
நமது நாட்டின் 80 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் இதன் பின்னர் திறந்த வெளி ஜீப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா உடன் ஆட்சியர் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்

இதன் பின்னர் மூவர்ணக் கொடி பலூன்கள் பறக்க விடப்பட்டன இதனைத் தொடர்ந்து சமாதான புறாவை பறக்கவிட்ட ஆட்சியர் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பொன்னாடைகள் அணிவித்து கௌரவித்தார்
இதன் பின்னர் காவலர்கள் என்சிசி மாணவர்கள் ஊர்க்காவல் படையினர் மற்றும் என் எஸ் எஸ் மாணவர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்

இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் தலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன
விழாவில். 33 பயனாளிகளுக்கு ;22 லட்சத்து 12 ஆயிரத்து 192 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியதோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 289
அரசு அலுவலர்கள் காவல்துறையினர் ஆகியோருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.



